Anasuya Bharadwaj: ‘செருப்பு பிஞ்சிடும்’.. தரம்தாழ்ந்தவிமர்சனம்; பொங்கிய நடிகை!
பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் நெட்டிசன் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
பிரபலங்கள் ஆன்லைன் ட்ரோலில் சிக்குவது மிகவும் வழக்கமான விஷயமாக மாறியிருக்கிறது; அதற்கு எந்த வித சிக்கல்களையும் கொடுக்காமல் பாதை போட்டு கொடுத்திருக்கிறது இந்த சோசியல் மீடியா!
ட்ரெண்டிங் செய்திகள்
உருவக்கேலி தொடங்கி அவர்களின் பர்சனல் பக்கங்களை வரை செல்லும் இந்த கெட்ட பழக்கம் சில சமயங்களை எல்லை மீறுவது அதற்கு பிரபலங்கள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடக்கும். அப்படியான சம்பவம் தற்போதும் நிகழ்ந்து இருக்கிறது.
‘புஷ்பா’ மற்றும் ரங்கஸ்தலம் படங்களில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுசுயா. இவர் கடந்த காதலர் தினத்தன்று தனது கணவர் பரத்வாஜூடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ‘உங்களுடனான வாழ்க்கை மிகவும் வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரி’ என்ற கேப்ஷனோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதைப்பார்த்த பலர் தங்களது வாழ்த்துகளை சொன்ன நிலையில், நெட்டிசன் ஒருவர் அனுசுயா கணவர் சுசாங்க் பரத்வாஜை வெறும் பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இந்த கமெண்டை சில நெட்டிசன்கள் ஆமோதித்ததோடு அதனை லைக்கும் செய்திருந்தனர்.
இந்த நிலையில் கமெண்டை பதிவிட்டவருக்கு ரிப்ளை செய்த அனுசுயா பொருள் சார்ந்த விஷயமான பணத்தை தாண்டி சிந்திக்குமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும் அவரிடம்தான் பணம் இருக்கிறதா? என்னிடம் இல்லையா என்ன என்று கேள்வி எழுப்பியதோடு கன்னத்தில் போட்டுக்கொள்.. இல்லையென்றால் செருப்பால் உன் கன்னத்தில் அறை அடிப்பேன் என்று எச்சரித்தார். அதனை பார்த்த நெட்டிசன் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அதுதான் உண்மை என்று சொன்னார்.
அதைப்பார்த்து கொந்தளித்த அனுசுயா எல்லாம் தெரிந்தது போல பேசக்கூடாது; மஞ்சள் காமாலை வந்தவர் கண்ணுக்கு உலகமெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியுமாம். உன்னுடைய புத்தி பணத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்காது தயசு செய்து மாறு’ என்று பதில் அளித்தார். இவர்களுக்கு இடையேயான மோதல் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது.
டாபிக்ஸ்