Actress Aamani: ஆரம்பத்தில் தனியாக அழைத்தார்கள் - பிரபல நடிகை பகீர்!
கதை சொல்வதாகக் கூறி என்னை பலர் தனியாக அழைத்துள்ளனர் என நடிகை ஆமனி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையைப் பொறுத்தவரைப் பல நடிகைகள் ஆரம்ப காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பலரும் தங்களது அனுபவங்களைச் சமீப காலமாகப் பெரிதும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஆமனி. இவர் தனது மோசமான அனுபவங்களைச் சமீப பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கர்நாடக மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் நடிகை ஆமனி. இவர் ஆததி, காதலு என்ற திரைப்படங்களின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். அம்மா மோகுடு, மிஸ்டர் பெல்லம், பிரேமே நா பிராணம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
சிறு கதாபாத்திரங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி படங்களில் நடித்து 90களில் முன்னாடி நடிகையாக இவர் வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என அனைத்து மொழி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த் நடித்த ஹானஸ்ட் ராஜ் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த முகமாக மாறினார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் தற்போது இவர் நடித்து வருகிறார்.
சினிமாவிற்குள் நுழையும் போது சிலர் என்னிடம் ஆபாசமாகப் பேசி தனியாக அழைத்தார்கள் எனச் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர்," ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். வாய்ப்புக்காகப் பல இடங்கள் தேடி அலைந்தேன். ஒரு சிலர் என்னிடம் மிகவும் ஆபாசமாகப் பேசினார்கள். கதை பற்றிப் பேச வேண்டுமென்றால் என்னைத் தனியாக அழைத்துள்ளார்கள். அதுசமயம் நான் பலமுறை மனம் உடைந்து உள்ளேன்.
பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் செய்தாக வேண்டுமா என எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்து என் அம்மாவிடம் பலமுறை புலம்பியுள்ளேன். திறமை இருந்தால் போதும் மற்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது எனப் பலமுறை எனக்கு என் தாயார் தைரியம் கொடுத்துள்ளார். எனது தாயாரின் தைரியத்தால் மட்டுமே நான் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
டாபிக்ஸ்