தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Vadivelu Explains How The Film Chandramukhi 2 Was Made

Vadivelu Byte: ‘சந்திரமுகி-2 படம் உருவாக நான் தான் காரணம்’ வடிவேலு ஓப்பன் டாக்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 05, 2022 08:17 PM IST

chandramukhi 2 movie: சந்திரமுகி 2 ஆரம்பிக்க காரணம் நான் தான். நான் தான் என்று கூறுவது திமிரு காரணமாக இல்லை. அது நல்ல படம் என்று கூற வருகிறேன்.

வடிவேலு -கோப்பு படம்
வடிவேலு -கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘கோயில் படத்தில் நானும் சிம்புவும் உறங்கிக் கொண்டிருப்போம். அப்போது திடீரென சிம்பு பதறி எழுவார். நான் அவரிடம் , ‘என்னப்பா ஆச்சு…’ என்று கேட்பேன். அதற்கு அவர், ‘சித்தப்பா… சூசை உன்னை வெட்டிக்கொலை செய்வதாக கனவு கண்டேன்’ என்று கூறுவார்.

‘என்னை ஏண்டா வெட்டுறான்…’ என்று அவரிடம் நான் கேட்பேன். அதற்கு அவர், ‘அவன் பொண்ணை நான் லவ் பண்றேன்ல, அதான் உன்னை வெட்டிட்டான்’ என்று கூறுவார். ‘நீ லைவ் பண்றதுக்கு என்னை ஏண்டா வெட்டணும்’ என்று நான் கேட்பேன், ‘சரி விடு சித்தப்பா… கனவு தானே படு’ என்பார் சிம்பு.

‘ஏண்டா… கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா’ என்று நான் கேட்பேன். இந்த மாதிரி நிறைய கனவுகள் எனக்கு வரும். தூங்கும் போதே காமெடி சிந்தனையில் நான் தூங்குவேன். கனவிலேயே காமெடி வரும்.

ஒரு படத்தை புக் பண்றதுக்கு முன்னாடி, என்ன கதைனு கேட்பேன். அட்வான்ஸ் வாங்கிட்டேன்னா, அடுத்த 15 நாளைக்கு நான் அதை பத்தி தான் யோசிப்பேன். சந்திரமுகி 2 பண்ணிட்டு இருக்கேன். வாசு சார் தான் டைரக்டர்.

இந்த படத்தை நாம பண்ணுவோமோன்னு லைகா சிஇஓ தமிழ் குமரன் சாரிடம் கேட்டேன். அவர் பண்ணுவோம் என்றார். நான் போய் கதையை கேட்டேன். 3 மணி நேரம் கதை சொன்னார். இதுவரை அவர் என்னிடம் அவ்வளவு நேரம் சொன்னதே இல்லை. எனக்கு கதை பிடித்துவிட்டது.

‘அண்ணே இதை நாம லைகாவுக்கு பண்ணுவோண்ணே…’ என்று வாசு அண்ணனிடம் கூறினேன். நீங்களே கேளுங்க பேசுங்க என்றார் அவர். உடனே தமிழ் குமரன் சாரிடம் வந்து சொன்னேன். அவர் ஓகே என்றார்.

சந்திரமுகி 2 ஆரம்பிக்க காரணம் நான் தான். நான் தான் என்று கூறுவது திமிரு காரணமாக இல்லை. அது நல்ல படம் என்று கூற வருகிறேன். போராடி இந்த கதையை பண்ணிருக்கார். முதலில் வேட்டையன் என்றுபெயர் வைத்தார். லாரன்ஸ் தான், சந்திரமுகி 2 என்று மாற்ற வைத்தார்.

அதே முருகேசன் கதாபாத்திரத்தில் தான் நானும் நடிக்கிறேன். இந்த படத்தை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. லாரன்ஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். பேயை பற்றி லாரன்ஸை விட யாருக்கு அதிம் தெரியப்போகிறது. லாரன்ஸ் அசத்தியிருக்கிறார்,’’
என்று வடிவேலு அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்