சனி விரட்டி புரட்டி அடிக்க போகிறார்.. உக்கிர பார்வையில் சிக்கிய ராசிகள்.. முரட்டு அடி உறுதி.. தப்பிக்க முடியாது
Lord Sani: சனிபகவானின் உக்கிர பார்வை விழுந்தால் சிலர் ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உண்டாகும். தற்போது சில ராசிகளின் மீது சனி பகவானின் கோபப்பார்வை விழுகின்றது. இதனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனிபகவானின் உக்கிர பார்வை விழுந்தால் சிலர் ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உண்டாகும். தற்போது சில ராசிகளின் மீது சனி பகவானின் கோபப்பார்வை விழுகின்றது. இதனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
சனி பகவானின் கோப பார்வையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான கஷ்டங்கள் மற்றும் தடைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாக்கியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 10 மாத காலம் உங்களுக்கு மோசமான சூழ்நிலையாக இருக்கும் எனவே கவனமாக இருங்கள்.
விருச்சிக ராசி
சனி பகவானின் உக்கர பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பல சங்கடங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இது கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் தொல்லைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
மகர ராசி
உங்கள் ராசியில் ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. சனிபகவானின் உக்கர பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் எடுத்த காரியங்கள் அனைத்தும் நடப்பதற்கு சற்று தாமதமாகும். மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சனி பகவானின் சொந்த ராசியாக நீங்கள் இருக்கின்ற காரணத்தினால் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய பொறுப்புகளால் முன்னேற்றம் அடைவதற்கு சற்று தாமதமாகும்.
கும்ப ராசி
சனி பகவானின் சொந்த ராசியாக நீங்கள் உள்ளீர்கள். உங்கள் ராசியில் ஏழரை சனி இரண்டாவது கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். உக்கர பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்த 10 மாத காலம் மிகவும் பொறுமையாக இருந்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்பு சில நேரங்களில் பலனளிக்காமல் போய்விடும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9