தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Karnataka Election: வாக்காளர்களை கவர பலே ஏற்பாடு..அரண்மனையாக மாறிய வாக்குச்சாவடி!

Karnataka Election: வாக்காளர்களை கவர பலே ஏற்பாடு..அரண்மனையாக மாறிய வாக்குச்சாவடி!

May 07, 2024, 01:49 PM IST

  • மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (மே 7) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் இன்று 2ம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், ஷிமோகா தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களை கவரும் விதமாக அரண்மனை வடிவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.