தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fire: நொய்டாவில் தோல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து-போராடி அணைத்த வீரர்கள்

Fire: நொய்டாவில் தோல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து-போராடி அணைத்த வீரர்கள்

Apr 28, 2024, 02:48 PM IST

  • நொய்டாவின் செக்டர் 65 பகுதியில் உள்ள தோல் தயாரிப்பு நிறுவன கட்டிடத்தில் ஏப்ரல் 28 அன்று தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தன. நொய்டாவின் தலைமை தீயணைப்பு அதிகாரி (CFO) பிரதீப் குமார் கூறுகையில், “தோல் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாலை 4.30 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது” என்றார்.