தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tenkasi: தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கவிழ்ந்த கார்..கணவன்-மனைவி பலியான சோகம்!

Tenkasi: தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கவிழ்ந்த கார்..கணவன்-மனைவி பலியான சோகம்!

Apr 29, 2024, 11:24 AM IST

  • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நெல்லையைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சுமித்ர ஆகிய இருவரும் பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தம்பதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.