தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Madurai: மதுரை அருகே கோர விபத்து.. 5 பேர் கொடூர பலி - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

Madurai: மதுரை அருகே கோர விபத்து.. 5 பேர் கொடூர பலி - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

Apr 11, 2024, 05:56 AM IST

  • மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் - திருமங்கலம் 4 வழிச்சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தளவாய்ப்புரத்தி்ல உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது இந்த நிகழ்ந்துள்ளது. இதில் வில்லாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.