தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : கேஸ் டியூப் மூக்கில் சொருகி.. பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Crime : கேஸ் டியூப் மூக்கில் சொருகி.. பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil

Oct 16, 2023, 08:08 AM IST

ஈரோடு அருகே பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி சிலிண்டரில் டியூப் சொருகி சுவாசித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு அருகே பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி சிலிண்டரில் டியூப் சொருகி சுவாசித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு அருகே பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி சிலிண்டரில் டியூப் சொருகி சுவாசித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடு அடுத்த எஸ்கேசி சாலை முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் மதிவதனசுந்தரம் (31). பொறியியல் பட்டதாரி. இவர் தந்தையுடன் மளிகை கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக சந்திரசேகரன், ஈரோடு கரூர் சாலை காந்திஜி வீதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. 

கடந்த 13ஆம் தேதி தந்தை தங்கியிருந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டரில் டியூப் சொருகி அதனை மூக்கில் வைத்து, பின்னர், பிளாஸ்டிக் கவரை முகத்தில் போட்டு கேஸ் சுவாசித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது, வெளியில் இருந்து வந்த சந்திரசேகரன் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மதிவதனசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி சிலிண்டரில் டியூப் சொருகி சுவாசித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி