தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: உலக கோப்பை கிரிக்கெட் பார்த்த மகளை தந்தை திட்டியதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Crime: உலக கோப்பை கிரிக்கெட் பார்த்த மகளை தந்தை திட்டியதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Nov 23, 2023, 10:59 AM IST

உலக கோப்பை கிரிக்கெட் பார்த்து விட்டு தேர்வில் மதிபெண் குறைந்தால் தந்தை திட்டியதற்காக கடும் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் பார்த்து விட்டு தேர்வில் மதிபெண் குறைந்தால் தந்தை திட்டியதற்காக கடும் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் பார்த்து விட்டு தேர்வில் மதிபெண் குறைந்தால் தந்தை திட்டியதற்காக கடும் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்  பார்த்து விட்டு  தேர்வில் மதிபெண் குறைந்தால் தந்தை திட்டியதற்காக கடும் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

கோவை அருகே மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் கண்ணம் பாளைம் பேரூராட்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சுருதிகா. இவருக்கு வயது 19. இவர் குனிய முத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தேர்வுக்கு படிக்க வேண்டிய மாணவி சுருதிகா டிவியில் உலக கோப்பை கிரிக்கெட் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் கல்லூரியில் நடந்த தேர்வில் மிக குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் சுருதிகாவை தந்தை திட்டிதாக கூறப்படுகிறது. தந்தை திட்டியதால் சுருதிகா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஸ்ருதிகா யாரும் வீட்டில் இல்லாத போது விஷம் குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் வீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சுருதிகா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சுருதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கோவையில் தந்தை திட்டியதற்காக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கம் பக்கத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி