தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாணவிகளுடன் ஆபாசமாக பேசிய ஆசிரியர் - தர்ம அடி கொடுத்த பெற்றோர்!

மாணவிகளுடன் ஆபாசமாக பேசிய ஆசிரியர் - தர்ம அடி கொடுத்த பெற்றோர்!

Divya Sekar HT Tamil

Jul 03, 2022, 11:51 AM IST

கரூரில் வாட்ஸ் ஆப் மூலம் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்தனர்.
கரூரில் வாட்ஸ் ஆப் மூலம் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்தனர்.

கரூரில் வாட்ஸ் ஆப் மூலம் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்தனர்.

கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மாணவிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பியும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து அந்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், லாலா பேட்டை போலீசார் ஆசிரியரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். 

இதில் மாணவிகளுக்கு ஆபாச செய்திகளும், புகைப்படங்களும் அனுப்பியிருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

டாபிக்ஸ்