தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Krishnagiri Crime : காதல் திருமணம் செய்த மகன்.. விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. கிருஷ்ணகிரியில் சோகம்!

Krishnagiri Crime : காதல் திருமணம் செய்த மகன்.. விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. கிருஷ்ணகிரியில் சோகம்!

Divya Sekar HT Tamil

Oct 07, 2023, 04:09 PM IST

கிருஷ்ணகிரி அருகே மகன் காதல் திருமணம் செய்த விரக்தியில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மகன் காதல் திருமணம் செய்த விரக்தியில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே மகன் காதல் திருமணம் செய்த விரக்தியில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சரவணன் (50). இவரது மனைவி கீதா(45). இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித்குமார் (25) துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் எதிர்வீட்டில் வசித்த பழனி, முருகம்மாள் தம்பதியின் மகள் தீபிகா (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

தீபிகா எம்.எஸ்.சி., பட்டதாரி. ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். தீபிகா படித்து வேலையில் இருப்பதாலும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்வர்கள் என்பதாலும், இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என எண்ணிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தீபிகாவின் பெற்றோர் ரஞ்சித்குமார் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு தங்கள் மகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மகனிடம் எவ்வளவு கூறியும் கேட்காமல் திருமணம் செய்த வருத்தத்தில் இருந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினர்.

அவர்கள் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் செல்லும் வழியிலேயே இறந்தனர். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி