தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nagercoil: புது மாப்பிள்ளையின் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்!

Nagercoil: புது மாப்பிள்ளையின் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்!

Nov 17, 2023, 11:28 AM IST

புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோயிலில் நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

நாகர்கோவில் கீழ மறவன் குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திக் இவருக்கு வயது 27. கார்த்திக்கிற்கு நாளை மறுநாள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் வீட்டில் திருமண ஏற்பாடுகள் பெரும் விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வீட்டை சீரமைக்கும் பணிகள் மாப்பிள்ளை கார்த்தியின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் கார்த்தி வீட்டில் உள்ள அறையில் எதிர்பாராத விதமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த உறவினர்கள் அவர் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கார்த்திக் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் கார்த்திக் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து அவரது செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினர் உள்ளிட்ட அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி