தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்.. கடைசியில் பறிபோன உயிர்.. இருவருக்கு தீவிர சிகிச்சை!

Crime : 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்.. கடைசியில் பறிபோன உயிர்.. இருவருக்கு தீவிர சிகிச்சை!

Divya Sekar HT Tamil

Oct 22, 2023, 10:30 AM IST

ஓமலூர் அருகே குடும்பத்தகராறில் 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அருகே குடும்பத்தகராறில் 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அருகே குடும்பத்தகராறில் 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாணிக்கம். இவரது மனைவி கௌசல்யா (25) இவர்களுக்கு ஸ்ரீ ரமேஷ் (10), தீபக்குமார் (6) என்ற இரண்டு மகன்கள். ஸ்ரீ ரமேஷ் (10) பொட்டியபுரம் துவக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். தீபக்குமார் (6) பொட்டியபுரம் அரசு துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் மற்றும் அவரது மனைவி கௌசல்யாவிற்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கௌசல்யா பள்ளிக்கு சென்ற தனது இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு கௌசல்யா அருகிலுள்ள ஜோசியக்காரன் என்பவருடைய கிணற்றில் தற்கொலை செய்ய குதித்துள்ளனர்.

சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது மூவரும் உயிருக்கு போராடிக்கொண்ரு இருந்துள்ளனர். இதை பார்த்து அதிச்சியடைந்த அவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து மூவரையும் காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர் இதில் இரண்டாவது மகன் தீபக்குமார் என்பவர் கிணற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாய் கௌசல்யா மற்றும் மூத்தமகன் ஸ்ரீ ரமேஷ் ஆகிய இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் இரு மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி