தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Krishnagiri: கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் விபரீத முடிவுக்கு காரணம் என்ன.. போலீசார் தீவிர விசாரணை!

Krishnagiri: கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் விபரீத முடிவுக்கு காரணம் என்ன.. போலீசார் தீவிர விசாரணை!

Oct 13, 2023, 11:29 AM IST

போலீசார் எம்.பி சுரேஷ் உடலை உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் எம்.பி சுரேஷ் உடலை உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் எம்.பி சுரேஷ் உடலை உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி என்ற பெயரில் பிரபல நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகை கடையை தொழிலதிபர் எம்.பி. சுரேஷ் நடத்தி வந்தார். மேலும் நகைக்கடை மட்டுமல்லாது ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி பகுதியில் அனைத்து வணிகர் சங்க நகர தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் காந்தி நகரில் உள்ளஅவரது வீட்டில் இன்று காலை 7.15 மணி அளவில் வழக்கம்போல் இருந்தார். திடீரென தன் படுக்கை அறையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் சரக டி.எஸ்.பி மனோகரன் மற்றும் போலீசார் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கி உரிமம் வைத்துள்ள அவரது துப்பாகியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை அல்லது கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி