தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Kodaikanal Summer Festival Tourists Enthusiastically Participated In Boat Race

Kodaikanal Summer Festival : கொடைக்கானல் கோடை விழா – படகு போட்டியில் உற்சாகமாக பங்கேற்ற சுற்றுலா பயணிகள்

Priyadarshini R HT Tamil

May 30, 2023, 01:50 PM IST

Kodaikanal Summer Festival : கொடைக்கானலில் கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி.. சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளை வென்று அசத்தினர்.
Kodaikanal Summer Festival : கொடைக்கானலில் கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி.. சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளை வென்று அசத்தினர்.

Kodaikanal Summer Festival : கொடைக்கானலில் கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி.. சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளை வென்று அசத்தினர்.

தமிழக மக்களுக்கு உள்ள பெஸ்ட் கோடை வாசஸ்தலம் என்றால், அது கொடைக்கானல்தான். கோடை ஆரம்பித்தாலே அங்கு மக்கள் கூட்டம் குவியத்துவங்கிவிடும். இங்குள்ள கோகர்ஸ் வாக், பிரியன்ட் பார்க், கொடைக்கானல் ஏரி, கரடி சோழா அருவி, பைன் பாரஸ்ட், குணா குகைகள், பில்லர் ராக், டால்பிஃன் நோஸ், ஃபயர் டவர், பெரிஜாம் லேக் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்து கிடக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

Today Gold Rate : என்னது மீண்டுமா.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை!

பட்ஜெட் ஃபிரெண்லி என்பதாலும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கோடைக்காலத்தில் குவியும். தமிழர்களின் கோடைக்கால சொர்க்கம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அரசும் பல்வேறு விழாக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை நடத்துகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் கோடை விழா மற்றும் 60வது மலர்க் கண்காட்சி 28ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூன் 2ம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது.

இவற்றை சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ ஏதுவாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கோடை விழாவையொட்டி, மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, பட்டிமன்றம், ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் கலைப்பண்பாட்டுத்துறை மூலம் தினமும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று கொடைக்கானல் தமிழ்நாடு படகு குழாமில் படகு போட்டிகள் நடைபெற்றது. படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சுற்றுலா வளர்ச்சி துறை மற்றும் படகு குழாம் சார்பாக நடைபெற்ற இந்த போட்டி இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் தம்பதியர் இரட்டையர் பிரிவு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இப்படகு போட்டியில் கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

டாபிக்ஸ்