தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert: ரூ.50 ஆயிரத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு; 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Job Alert: ரூ.50 ஆயிரத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு; 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Dec 27, 2023, 11:53 AM IST

TN Govt Jobs: ‘அலுவலக பணிநாட்களில் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’
TN Govt Jobs: ‘அலுவலக பணிநாட்களில் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’

TN Govt Jobs: ‘அலுவலக பணிநாட்களில் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அந்த வாய்ப்பு, உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? 

ட்ரெண்டிங் செய்திகள்

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

செய்ய வேண்டியது என்ன?

இந்த பணி வாய்ப்பை பெற விரும்புபவர்கள், அஞ்சல் வழியாக தங்கள் விருப்ப விண்ணப்பத்தை அனுப்பலாம். இது ஒரு ஆப்லைன் விண்ணப்ப முறையாகும். வாட்ச்மேன் எனப்படும் இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 2024 ஜனவரி 9 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆபிஸ் அசிஸ்டெண்ட் எனப்படும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு,  2024 ஜனவரி 19 ம் தேதி கடைசி நாளாகும். இந்த கால நிர்ணயத்தில், தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள், தங்கள் விண்ணப்படிவத்தை அனுப்பலாம். அலுவலக பணிநாட்களில் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

பணி விபரம் என்ன?

  • பணியிடம்: ராமநாதபுரம்
  • பணிகள்: இரவு காவலர்கள்-2, அலுவலக உதவியாளர்-3
  • ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை.
  • கல்வித் தகுதி: எழுதி படிக்கத் தெரிந்தால் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
  • வயது: குறைந்த பட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபட்ச வயதாக 32 வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  • தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.
  • விண்ணப்பி முகவரி: ஆணையாளர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), ஊராட்சி ஒன்றியம், மண்டபம் (இ) உச்சிப்புளி – 623535

விண்ணப்பிக்கும் முறை

 https://ramanathapuram.nic.in/ என்கிற இணையதளத்திற்கு செல்லவும்

அதில் உள்ள Recruitment of Night Watchman in Tiruvadanai Union Office மற்றும் Recruitment of Office Assistant / Night Watchman in Mandapam என்ற அறிவிப்பை க்ளிக் செய்யவும்

குறிப்பை சரிபார்த்த பின், தகுந்த விண்ணப்பதாரர்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பவும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி