தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : ஈரோடு அருகே பகீர்.. பாட்டி பேரன் எடுத்த விபரீத முடிவு.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Crime : ஈரோடு அருகே பகீர்.. பாட்டி பேரன் எடுத்த விபரீத முடிவு.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Divya Sekar HT Tamil

Nov 26, 2023, 10:56 AM IST

ஈரோடு அருகே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பேரனுடன் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பேரனுடன் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பேரனுடன் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியைச் சேர்ந்தவர் நூற்பாலை தொழிலாளி பொன்னுச்சாமி (50). பொன்னுச்சாமியின் முதல் மனைவி வசந்தாமணி இறந்துவிட்ட நிலையில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நவீன்குமார் (30), இரண்டாவது மனைவி மற்றும் பொன்னுச்சாமியின் தாய் சுப்பம்மாள் (82) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

இதில் நவீன்குமார் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயது முதலே நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாடி வந்ததாகவும்நடக்க முடியாமல் இருந்த நவீன் குமாரை பாட்டி சுப்பம்மாள் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு பொன்னுச்சாமி வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகள் தனியார் கண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொன்னுச்சாமி, தாய் சுப்பம்மாள் மற்றும் மகன் நவீன்குமார் ஆகிய இருவரையும் காணாததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடியுள்ளார்.

பின்னர் வீட்டின் முன்புறம் உள்ள 15 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியின் மூடி திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்து தொட்டிக்குள் பார்த்தபோது சுப்பம்மாள், நவீன் குமார் ஆகிய இருவரும் தொட்டியில் சடலமாக மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த பொன்னுச்சாமி, இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரது சடலங்களை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பேரன் நவீன் குமார் சக்கர நாற்காலியில் நடமாடுவதைக் கண்டு மூதாட்டி சுப்பம்மாள் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மன விரக்தியில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி