தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School: பள்ளியில் மது குடித்து மாணவிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்! சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஒருவர் தற்கொலை முயற்சி!

school: பள்ளியில் மது குடித்து மாணவிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்! சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஒருவர் தற்கொலை முயற்சி!

Kathiravan V HT Tamil

Sep 03, 2023, 08:41 AM IST

”மாணவிகள் மது அருந்துவதை பார்த்த மாணவர்கள் சிலர் விஷயத்தை பள்ளி தலைமை ஆசிரியரின் காதுகளுக்கு கொண்டு சென்றதால் விவகாரம் பூதாகரமானது.”
”மாணவிகள் மது அருந்துவதை பார்த்த மாணவர்கள் சிலர் விஷயத்தை பள்ளி தலைமை ஆசிரியரின் காதுகளுக்கு கொண்டு சென்றதால் விவகாரம் பூதாகரமானது.”

”மாணவிகள் மது அருந்துவதை பார்த்த மாணவர்கள் சிலர் விஷயத்தை பள்ளி தலைமை ஆசிரியரின் காதுகளுக்கு கொண்டு சென்றதால் விவகாரம் பூதாகரமானது.”

திண்டுக்கலில் மது அருந்தி மாணவில் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விரக்தியில் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar: ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் பாணவி ஒருவருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் மாணவியின் பிறந்தநாளை சக மாணவிகள் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆண்களை போலவே தாங்களும் பீர் உள்ளிட்ட மது பானத்தை வாங்கி கொண்டாட திட்டமிட்டனர். இதற்காக பீர் பாட்டில்கள், ஜூஸ், கேக், திண்பண்டங்களை யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு மாணவிகள் எடுத்து சென்றனர்.

இதனை அடுத்து மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் யாரும் இல்லாதபோது மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்துள்ளது. இதில் பிறந்தநாளை கொண்டாடும் மாணவி உட்பட 7 மாணவிகள் ஆட்டம், பாட்டத்துடன் கேக் வெட்டியும் கேக்கை முகத்தில் தடவி ஆடி பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துயதுடன் ஜூஸ் பாட்டிலில் பிரை மிக்ஸ் செய்து குடித்தனர்.

இதனை பார்த்த மாணவர்கள் சிலர் விஷயத்தை பள்ளி தலைமை ஆசிரியரின் காதுகளுக்கு கொண்டு சென்றதால் விவகாரம் பூதாகரமானது. சம்பந்தப்பட்ட 7 மாணவிகளை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததுடன் பெற்றோர்களுக்கு நடந்த சம்பவத்தை விளக்கி மாணவிகளை சஸ்பெண்ட் செய்தனர்.

இதனை தொடந்து மாணவி ஒருவர் வீட்டில் இருக்கும்போது விரக்தி அடைந்த மாணவி கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற பின் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அந்த மாணவிக்கு உடல் நிலை மீண்டும் மோசமானதால் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி