தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தொடர்ந்து மாற்றப்படும் தேதிகள்! மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு! புதிய விவரங்கள் என்ன?

தொடர்ந்து மாற்றப்படும் தேதிகள்! மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு! புதிய விவரங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil

May 26, 2023, 09:12 AM IST

தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இந்தாண்டு பல்வேறு குளறுபடிகள் மற்றும் தேதியை அடிக்கடி மாற்றி நடத்தப்படுவது ஆசிரியர்களை அலைக்கழிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இந்தாண்டு பல்வேறு குளறுபடிகள் மற்றும் தேதியை அடிக்கடி மாற்றி நடத்தப்படுவது ஆசிரியர்களை அலைக்கழிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இந்தாண்டு பல்வேறு குளறுபடிகள் மற்றும் தேதியை அடிக்கடி மாற்றி நடத்தப்படுவது ஆசிரியர்களை அலைக்கழிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

இதற்காக ஏற்கனவே ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். இந்த சூழலில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது. இதற்கிடையே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ம் தேதி தொடங்குவதாக இருந்தது.

எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2022- 2023ம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ சார்பாக திருத்திய கால அட்டவணைகளை வெளியிட்டது.

தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு 29ம் தேதிக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு 30ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ சார்பாக கீழ்க்காணும்‌ திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறும்‌ என்பதை அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ (தொடக்கக்‌ கல்வி) தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்