தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு - நியூயார்க் நகரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

Tamil Live News Updates: டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு - நியூயார்க் நகரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

HT Tamil Desk HT Tamil

Jan 05, 2024, 07:25 PM IST

Tamil Live News Updates: இன்றைய (05.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (05.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: இன்றைய (05.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்போடாஸில் நடைபெறும் என அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : அடேங்கப்பா.. 54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

நாளை முதல் கேப்டன் மில்லர் பட டிரெய்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ட்ரெய்லர், சன் டிவி யூடியூப் பக்கத்தில் நாளை வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது

ஆன்லைன் சூதாட்டதால் ஆசிரியர் தற்கொலை

Suicide: மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ. 8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராக உத்தரவு

Kodanad Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை - கடற்கரை ஏசி பெட்டிகளை இணைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரதமர் மோடியை சாடிய சீமான்!

Seeman:"திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க வர முடிந்த பிரதமர் மோடியால், தூத்துக்குடிக்கு வர முடியவில்லை" - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம்.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை - நீதிமன்றம் உத்தரவு

தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை. சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்ய கோரி தனியார் நிறுவன பங்குதாரர்கள் மனு.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்துள்ள நிலையில் தனியார் பங்கு தாரர்களுக்கு அனுப்பிய சம்மனை செயல்படுத்தவும் தடை விதித்து உத்தரவு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மேற்குதொடர்ச்சியை ஒட்டியிருக்கும் மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் இன்றும், தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

பொங்கல் பரிசு தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்!

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைதாரரின் பெயர், குடும்ப அட்டை எண், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், கிழமை ஆகியவை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கூறிய மனு தள்ளுபடி!

ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கூறிய மனு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான் -விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா பேட்டி!

"அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரைப் போல யாரும் இல்லை. எப்போதும் அவரின் நினைவு இருக்கும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு " என விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1,847 காவலர்கள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் தலைமைக் காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உட்பட 1,847 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு!

Senthil Balaji : அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

மிசோரமில் லேசான நிலநடுக்கம்

Earthquake: மிசோரம் மாநிலம் லங்லை பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒத்தக்கடை அருகே சாலை விபத்து!

Accident: மதுரை ஒத்தக்கடை சந்திப்பு அருகே சபரிமலையில் இருந்த வேனும் திருச்சியில் இருந்து வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Goondas: கடந்த டிசம்பர் மாதம் பேக்கரி கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்த வழக்கு மற்றும் உணவக உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சரித்திர பதிவேடு ரவுடி முகிந்தர் என்ற அமர்நாத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா!

T20: இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு இடையேயான  3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் இன்று நவி மும்பையில் தொடங்கப்பட உள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி இறுதியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவை Whitewash செய்தது குறிப்பிடத்தக்கது.

கொலை குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் துப்பாக்கி சூடு

Gun Shoot: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, ரவுடி கும்பல் அரிவாள் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

நெல்லை களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களை பிடிப்பதற்காக சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்!

Petorl Diesel Price: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 594 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.05) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி