தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anitha Radhakrishnan : அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

Anitha Radhakrishnan : அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

Divya Sekar HT Tamil

Aug 02, 2023, 11:11 AM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். தற்போது மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4,90,29,040 அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக 2020 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அனிதா ராதாகிருஷ்ணன் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.

இதைத் தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ 2.76 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கியது.

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. இதன் மீதான விசாரணை கடந்த 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 80 சதவீதம் விசாரணை நிறைவடைந்துள்ளது.

இதனால் அமலாக்கத் துறையை இதில் சேர்த்துக் கொள்ள முடியாது என தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இந்த வழக்கு இன்றைய தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது.

ஆனால் தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் விசாரணை 23ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி