தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Badminton: ஆசிய டீம் பேட்மிண்டனில் பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி சீனாவை வீழ்த்தி அசத்தல்!

Badminton: ஆசிய டீம் பேட்மிண்டனில் பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி சீனாவை வீழ்த்தி அசத்தல்!

Manigandan K T HT Tamil

Feb 14, 2024, 05:48 PM IST

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தலைமையிலான பெண்கள் அணி, 17 வயதான அன்மோல் கராப் உத்வேகமான செயல்திறனுடன் சீனாவை முதல் முறையாக தோற்கடித்து குரூப் W மோதலில் இந்தியாவுக்கு ஆதரவாக 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. (REUTERS)
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தலைமையிலான பெண்கள் அணி, 17 வயதான அன்மோல் கராப் உத்வேகமான செயல்திறனுடன் சீனாவை முதல் முறையாக தோற்கடித்து குரூப் W மோதலில் இந்தியாவுக்கு ஆதரவாக 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தலைமையிலான பெண்கள் அணி, 17 வயதான அன்மோல் கராப் உத்வேகமான செயல்திறனுடன் சீனாவை முதல் முறையாக தோற்கடித்து குரூப் W மோதலில் இந்தியாவுக்கு ஆதரவாக 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சிலாங்கூர்: மலேசிய தலைநகர் சிலாங்கூரில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு இந்திய ஆடவர் அணி முன்னேறியது.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

அதேநேரம், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தலைமையிலான பெண்கள் அணி, 17 வயதான அன்மோல் கராப் உத்வேகமான செயல்திறனுடன் சீனாவை முதல் முறையாக தோற்கடித்து குரூப் டபிள்யூ மோதலில் இந்தியாவுக்கு ஆதரவாக 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பின்னர் நடந்த போட்டியில் ஆண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி 'ஏ' பிரிவில் இருந்து முதல் இரண்டு இடங்களை பிடித்தது.

ஆனால் பேசுபொருளாக இருந்தது இந்திய பெண்கள் அணி சீனாவை வீழ்த்தியது தான். நீண்ட காயத்திலிருந்து மீண்டு வந்த சிந்து, ஹான் யூவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தை எளிதாக வென்றதன் மூலம் தனது பார்மை மீண்டும் பெறுவது மட்டுமல்லாமல், தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தார், பின்னர் அடுத்த 13 புள்ளிகளில் 11 புள்ளிகளை வென்று 10-13 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையை மாற்றி இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் (பிஏஐ) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இரட்டையர் பிரிவில் தனிஷா கிராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா மற்றும் ஒற்றையர் வீராங்கனை அஷ்மிதா சாலிஹா ஆகியோர் தைரியமாக போராடினாலும், இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியிருப்பதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

இருப்பினும், ஆல் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிய ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் உலக தரவரிசையில் 22 வது இடத்தில் உள்ள லி யி ஜிங் மற்றும் லுவோ சூ மின் ஆகியோரை ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் போராடி 10-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் வென்றனர்.

அப்போது அனைவரின் பார்வையும் தேசிய சாம்பியன் அன்மோல் மீது இருந்தது, அவர் முதல் முறையாக போட்டியில் விளையாடினார்.

ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தாலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற தனது கேம் பிளானில் உறுதியாக இருந்த அவர் 22-20, 14-21, 21-18 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை முடித்தார்.

குரூப் டபிள்யூ பிரிவில் 2 அணிகள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய பேட்மிண்டன் சங்க பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா கூறுகையில், "இந்திய அணி சீனாவை வீழ்த்தியது ஒரு சிறப்பு உணர்வைத் தருகிறது. மிக முக்கியமாக, அணியைத் தேர்ந்தெடுக்கும்போது நாங்கள் இளைஞர்கள் மீது நம்பிக்கை காட்டினோம். அவர்களை ரிசல்ட்டை கொடுக்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

பெண்கள் பிரிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது

டாபிக்ஸ்

அடுத்த செய்தி