தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Russian Girl: கேரளாவில் ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை - சிறை சென்ற இளைஞர்!

Russian Girl: கேரளாவில் ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை - சிறை சென்ற இளைஞர்!

Mar 26, 2023, 01:07 PM IST

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கேரள இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கேரள இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கேரள இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூராச்சுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆகில் என்பவர். 26 வயதான இந்த இளைஞன் கத்தார் நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கு ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

அதன் பின்னர் முகமது ஆகில் அழைத்ததன் பேரில் அந்த ரஷ்ய பெண் கேரளாவிற்கு வந்துள்ளார். அதன் பிறகு இரண்டு பேரும் நேபாளம், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரும் கோழிகோடுக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர்.

இரண்டு பேரும் கூராச்சுண்டுவில் உள்ள ஆகில் வீட்டில் தங்கி உள்ளனர். கட்டடத்தில் இருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், முகமது ஆகிலுக்கும், அந்த ரஷ்ய பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முகமது ஆகில், அந்த ரஷ்ய பெண்ணுக்குக் கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் தன்னை பலமாகத் தாக்கியதாக அந்த ரஷ்ய பெண் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முகமது ஆகில் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கொயிலாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை செய்ய முகமது ஆகிலை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சமீபகாலமாக பாலியல் வன்கொடுமையின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் தொடங்கி இளம் பெண்கள் வரை பலர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தற்போது ரஷ்ய இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்