தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இதுக்காக இப்படியா? மனித எலும்பை சாப்பிட சொல்லி மருமகளை சித்ரவதை செய்த மாமியார்!

இதுக்காக இப்படியா? மனித எலும்பை சாப்பிட சொல்லி மருமகளை சித்ரவதை செய்த மாமியார்!

Karthikeyan S HT Tamil

Jan 21, 2023, 12:23 PM IST

Pune Black Magic:சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை இளம்பெண்ணை சாப்பிட சொல்லி அவரது மாமியார் மற்றும் கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Pune Black Magic:சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை இளம்பெண்ணை சாப்பிட சொல்லி அவரது மாமியார் மற்றும் கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Pune Black Magic:சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை இளம்பெண்ணை சாப்பிட சொல்லி அவரது மாமியார் மற்றும் கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை வரம் வேண்டி வீட்டில் அமாவாசை இரவுகளில் பல சந்தர்ப்பங்களில் நீருக்கு கீழ் ‘அகோரி’ பயிற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் அந்தப் பெண் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

FACT-CHECK : உணவு பரிமாறும் போது பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருந்ததா? வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?

போலீசார் பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகராஷ்டிர மாநிலம் புணே நகரைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் வரதட்சணையாக தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த அந்த பெண்ணின் வாழ்க்கையில் மீண்டும் வரதட்சணை கொடுமை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கணவர், மாமியார் மற்றும் உறவினர்கள் அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்யத் தொடங்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாத குறையால் கணவர் குடும்பத்தார் புணேவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளனர்.

அப்போது அந்த மந்திரவாதி வீட்டில் அமாவாசை நாளில் நீருக்கு கீழ் ‘அகோரி’ பயிற்சியில் ஈடுபட்டு சில பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் சுடுகாட்டுக்கு சென்று மனித எலும்புகளை சாப்பிட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உருவாகும் எனவும் கூறி இருக்கிறார். இதை உண்மை என நம்பிய பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் குடும்பத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதன்படி, சம்பவத்தன்று மந்திரவாதி வீட்டுக்கு வந்து சில பரிகார பூஜைகளை செய்திருக்கிறார். பின்னர் அந்த பெண் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கும் சில பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது.

இறுதியாக சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை அந்த பெண்ணை சாப்பிட சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து சிங்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை வரம் வேண்டி வீட்டில் அமாவாசை இரவுகளில் பல சந்தர்ப்பங்களில் நீருக்கு கீழ் ‘அகோரி’ பயிற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் அந்தப் பெண் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து புணே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் சர்மா கூறுகையில், இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடந்த சம்பவம் குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி