தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress President Poll: காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Congress President poll: காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Karthikeyan S HT Tamil

Oct 19, 2022, 12:12 PM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியுள்ளது.

புதுதில்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு திங்கட்கிழமை (அக்.17) நடைபெற்றது. 137 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் வரலாற்றில் தேசியத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற 6-வது தேர்தல் இதுவாகும். இதில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். 

காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் சுமார் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து இன்று (அக்.19) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கட்சி தலைமை அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் இன்றே அறிவிக்கப்படும்.

முன்னதாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ராஜிநாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா தொடர்ந்து வந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ராகுல் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். 

இதையடுத்து மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக 22 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் அமரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்