தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Adolf Hitler:'நல்லவரா.. கெட்டவரா':ஒரு பக்கம் வறுமை.. மறுபக்கம் 40ஆயிரம் குழந்தைகளைக் கொன்ற அரக்கன் - ஹிட்லரின் மறுபக்கம்

Adolf Hitler:'நல்லவரா.. கெட்டவரா':ஒரு பக்கம் வறுமை.. மறுபக்கம் 40ஆயிரம் குழந்தைகளைக் கொன்ற அரக்கன் - ஹிட்லரின் மறுபக்கம்

Marimuthu M HT Tamil

Apr 30, 2024, 10:45 AM IST

Adolf Hitler: சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுநாள் தொடர்பான கட்டுரை
Adolf Hitler: சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுநாள் தொடர்பான கட்டுரை

Adolf Hitler: சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுநாள் தொடர்பான கட்டுரை

Adolf Hitler: ஜெர்மனை 1933ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர், அடால்ஃப் ஹிட்லர். இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய மூளையாக இருந்தவர். கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரான யூதர்கள் மீதான கடும் எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்பு, ஜெர்மனியைப் பெரிதாக்கப் பார்த்தது என்பது தான் ஹிட்லரின் பார்வையாக இருந்தது. அவரது ஆட்சியின்போது யூதர்கள் நாடு கடத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

யார் இந்த அடால்ஃப் ஹிட்லர்?அலாய்ஸ் ஹிட்லருக்கும் அவரது மூன்றாவது மனைவி கிளாரா போல்ஸுக்கும் நான்காவது குழந்தையாக ப் பிறந்தவர், ஹிட்லர். பிறப்பில் ஜெர்மனுக்கு அருகிலுள்ள ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்தவர். இவருடன் பிறந்த நால்வர் நோயின் காரணமாக இறந்துவிட, இவரை விட ஏழு வயது சிறிய தங்கை பவுலா ஹிட்லர் மட்டும் குடும்பத்தில் இருந்தார்.

சிறுவயதில் தன் தாயையும் தன்னையும் தந்தை அலாய்ஸ் கொடுமைப்படுத்தியதாக, ’’மெயின் கேம்ப்’’ என்னும் சுயசரிதைப் புத்தகத்தில் எழுதியிருப்பார். இதனால் தாய் மீது மிகவும் பாசமாக இருந்தார். 1903ஆம் ஆண்டு,ஹிட்லரின் 14 வயதில் அவரது தந்தை மரணம் எய்தினார். ஆரம்பத்தில் நன்கு படித்த ஹிட்லர், பின் ஓவியத்தில் ஆர்வம் காட்டினார்.

வறுமையும் தாயின் அரவணைப்பும்:

தனது 16 வயதில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தனது அம்மாவுடன் வசித்த ஹிட்லர், வறுமையில் தன் தாய்க்கு கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையில் வாழ்ந்தார். 1909ஆம் ஆண்டு, அவரது தாய் மரணம் அடைந்தபின், தாயின் ஆதரவற்றோர் உதவித்தொகை, ஹிட்லருக்கு கிடைக்கத்தொடங்கியது. அதன்மூலம், கிடைத்த பணம், பூர்வீகச் சொத்தில் கிடைத்த சிறுதொகை, ஓவியங்கள் வரைந்து விற்று கிடைக்கும் சொற்ப பணம் ஆகியவற்றின் மூலம், தன்னையும் தன் தங்கை பவுலாவின் தேவைகளையும் ஓரளவு பூர்த்தி செய்தார்,ஹிட்லர்.

ஹிட்லரின் யூத எதிர்ப்பு: ஹிட்லர் தனது இளமைக்காலத்தில் வசித்த வியன்னாவில் யூதர்கள் மேலோங்கி இருந்தனர். அவர்கள் செய்த வகுப்புவாத கலவரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதனால் யூத கிறிஸ்தவர்களை வெறுத்தார், ஹிட்லர். பிறப்பால், ஹிட்லர் ஒரு கிறிஸ்தவர். அதில் புரோட்டஸ்டன்ட் வழிபாட்டு முறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் அவர் இஸ்லாமிய மற்றும் ஜப்பானிய வழிபாட்டு முறைகளை ஆதரித்தார்.

முதல் உலகப்போரில் ராணுவ வீரராகப் பணியாற்றிய ஹிட்லர்: பூர்வீகச் சொத்து கிடைத்த பின், ஜெர்மன் நாட்டின் 1913ஆம் ஆண்டு முனீச் நகருக்கு புலம்பெயர்ந்தார், ஹிட்லர். 1914ஆம் ஆண்டு ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுத்தபோது, பல்வேரிய ராணுவப்பிரிவில் இணைந்து, 40ஆயிரம் குழந்தைகளை 20 நாளில் கொல்லும் குழுவில் இணைந்து பணியாற்றினார்,ஹிட்லர். பிறப்பால் ஆஸ்திரியனாக இருந்தாலும், ஜெர்மன் நாட்டினை அதிகம் நேசித்தார் ஹிட்லர். இருப்பினும் 1931ஆம் ஆண்டு வரை ஆஸ்திரிய குடிமகனாகவே இருந்தார், ஹிட்லர். 

அரசியல் முதல் ஜெர்மன் நாட்டின் அதிபர்:

1919ஆம் ஆண்டு, நாஜிகட்சி என அழைக்கப்பட்ட தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்து, 1921ல் கட்சியின் தலைவர் ஆனார். அவர் யூத எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, ஜெர்மனை விரிவாக்குதல் ஆகிய கொள்கைகளைப் பேசி,அதிக மக்களை தன் பக்கம் ஈர்த்தார். 1932ஆம் ஆண்டு, ஜெர்மன் குடிமகனான ஹிட்லர், 1933ஆம் ஆண்டு, நாஜிக் கட்சியின் சார்பில் அந்நாட்டின் அதிபர் ஆனார். அப்போது சர்வாதிகாரியாக செயல்பட்டார். யூதர்கள் பலரை கொன்று குவித்தார். சிறைப்படுத்தினார். திடீரென 1939ஆம் ஆண்டு போலந்து மீது படையெடுத்தார், 1941ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா மீது படையெடுத்தார். இது இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்தன. ஜெர்மனிக்கு ஆதரவாக, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள், அச்சுநாடுகள் என்ற பெயரில், இன்னபிறநாடுகளை(நேச நாடுகள்) எதிர்த்துப் போரிட்டன.

சோவியத் ஒன்றியம் தன்னை நெருங்குவதை அறிந்த ஹிட்லர், தனது நீண்டநாள் லிவிங் டூ கெதர் காதலியான இவா பிரவுனை, சாவதற்கு இரண்டு நாட்கள் முன் திருமணம் செய்துகொண்டார். ஏப்ரல் 30,1945ஆம் ஆண்டு, ஹிட்லரும், அவரது மனைவியுமான இவா பிரவுன் ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ஹிட்லர், தன் பெயருக்கு முன் சொருகிக்கொண்ட அடால்ஃப் என்பதற்கு உயர்தர ஓநாய் என்று பொருள். அதை சாவிலும் நிரூபித்து, தன் வரலாற்றின் இறுதியை, தன் கைப்படவே எழுதிக்கொண்டார், ஹிட்லர். அவரின் இறுதி ஆசைப்படி, அவர் மற்றும் அவரது மனைவியின் உடல் எரிக்கப்பட்டது. 

அடால்ஃப் ஹிட்லரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இறுதியில் சர்வாதிகாரியாக ஹிட்லர் மாறினாலும், ஆரம்பத்தில் ஒரு வறுமை வாழ்க்கை வாழ்ந்தவர் ஹிட்லர். அந்த இளமைப் பருவவத்துக்கும் வாழ்வின் இறுதிப்பக்கத்துக்கும் இடைப்பட்ட கால வளர்ச்சி பலரும் அறிந்து கொள்ளவேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  

டாபிக்ஸ்

அடுத்த செய்தி