தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  6 Itbp Troops Die As Bus With Over 30 Security Personnel Meets With Accident

J&K Accident: பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது - 6 பேர் பலி

Karthikeyan S HT Tamil

Aug 16, 2022, 01:44 PM IST

ஜம்மு-காஷ்மீரில் இந்தோ - திபெத் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஜம்மு-காஷ்மீரில் இந்தோ - திபெத் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஜம்மு-காஷ்மீரில் இந்தோ - திபெத் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்தோ - திபெத் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Elon Musk arrives in China: இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த சில நாட்களில் சீனா சென்ற பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்!

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி வாக்கத்தான்

திண்ணை பள்ளியில் கல்வி.. தமிழ் எங்கள் மூச்சு.. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த உ.வே.சா..!

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். 

தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் பேருந்து பிரேக் பிடிக்காமல் ஆற்றில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து பஹல்காம் போலீசார் கூறுகையில், சந்தன்வாரி மற்றும் பஹல்காம் இடையே பேருந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வீரர்கள் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்