தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Remedy: மலக்கட்டு, சிறுநீர் எரிச்சலை போக்கும் துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்!

Herbal Remedy: மலக்கட்டு, சிறுநீர் எரிச்சலை போக்கும் துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்!

I Jayachandran HT Tamil

Jun 12, 2023, 09:14 PM IST

மலக்கட்டு, சிறுநீர் எரிச்சலை போக்கும் துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மலக்கட்டு, சிறுநீர் எரிச்சலை போக்கும் துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

மலக்கட்டு, சிறுநீர் எரிச்சலை போக்கும் துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

மூலிகைகளில் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது துத்தி இலை. நாட்டு மருந்து கடைகளில் உலர்ந்த துத்தி இலைகள் கிடைக்கும். அதைவைத்து சிறந்த கைவைத்தியங்களை பல்வேறு உடல் உபாதைகளுக்கு நிவாரணமாகப் பயன்படுத்தலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Nannari : குளுகுளு கோடைக்கு உறுதுணை மட்டுமல்ல நன்னாரி உடலுக்கு வழங்கும் நன்மைகள் எத்தனை தெரியுமா?

Climate Change : சுட்டெரிக்கும் வெயில்; கருகும் பயிர்கள்! பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்வது?

Parenting Tips : குழந்தைகள் திரையிலே மூழ்கிக்கிடக்கிறார்களா? அவர்களை விளையாட அழைத்துச் செல்வது எப்படி?

Benefits of Soaked Dry Figs : உலரவைத்த அத்தியை ஊறவைத்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். துத்தி பூ, ரத்தப் போக்கை அடக்கும்; காமம் பெருக்கும்; இருமலைக்குறைக்கும்; ஆண்மையைப் பெருக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது. துத்தி 2 செமீ வரை உயரமானது. தாவரம் முழுவதும் மென்மையான உரோமங்கள் உண்டு. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். துத்தி இலைகளின் அடிப்பாகம் மெழுகு பூசியது போன்று காணப்படும். சில நேரங்களில் 3 மடல்களாகப் பிரிந்திருக்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக வளர்கின்றது. கடற்கரை ஓரங்கள், சமவெளிகளில் அடர்ந்து காணப்படும்.

துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு. மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும். துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.

வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்தக் காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது. 20 மி.லி. பூச்சாற்றுடன், சிறிதளவு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இரத்த வாந்தி கட்டுப்படும். துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும். துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும். துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி