தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Remedies: உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

Herbal Remedies: உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

I Jayachandran HT Tamil

Jun 11, 2023, 12:41 PM IST

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

ICMR: தேநீர், காபி பருகுவதைத் தவிர்க்கனுமா.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உணவு வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

Rice For Long Time : அரிசிக்குள் பூச்சிகள் வண்டுகள் விழுகாமல் இருக்க இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்!

மாங்காய் சாப்பிடலாமா? மாம்பழம் சாப்பிடலாமா? எது சிறந்தது.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்.. இதோ பாருங்க!

Chia Seed Benefits : ஒரு நாளுக்கு எவ்வளவு சியா விதைகள் சாப்பிடலாம் தெரியுமா! புற்று நோய் முதல் எத்தனை நோய்க்கு தீர்வு!

சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.

பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிக்கிறது; சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.

வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது.

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் - சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.

அடுத்த செய்தி