September 4 Tamil News Updates: காங்கிரஸ் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
Sep 04, 2022, 09:48 AM IST
காங்கிரஸ் கட்சி இன்று டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய கடற்கரை ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிலைகளை கரைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
35 ஆவது கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னையில் இன்று 35 ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பலபரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் இன்று மீண்டும் மோதுகிறது.
ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.