தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sri Vardhini: ‘அவருக்கு இவ்வளவு வெறினு தெரியாது’ தமன் மனைவி ஸ்ரீ வர்தினி பேட்டி!

Sri Vardhini: ‘அவருக்கு இவ்வளவு வெறினு தெரியாது’ தமன் மனைவி ஸ்ரீ வர்தினி பேட்டி!

HT Tamil Desk HT Tamil

Mar 15, 2023, 06:15 AM IST

Thaman: அள்ளித்தந்த வானம் படத்தில், ‘கண்ணாலே மெய்யா மெய்யா’ பாடல் தான், நான் பாடி முதலில் ரிலீஸ் ஆன பாடல். அது நல்ல ஹிட் ஆனது.
Thaman: அள்ளித்தந்த வானம் படத்தில், ‘கண்ணாலே மெய்யா மெய்யா’ பாடல் தான், நான் பாடி முதலில் ரிலீஸ் ஆன பாடல். அது நல்ல ஹிட் ஆனது.

Thaman: அள்ளித்தந்த வானம் படத்தில், ‘கண்ணாலே மெய்யா மெய்யா’ பாடல் தான், நான் பாடி முதலில் ரிலீஸ் ஆன பாடல். அது நல்ல ஹிட் ஆனது.

தமிழில் பல ஹிட் பாடல்கள் பாடிய பாடகியும், இசையமைப்பாளர் தமனின் மனைவியுமான ஸ்ரீ வர்தினி, இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி சுவாரஸ்யமானது. இதோ அந்த பேட்டி:

ட்ரெண்டிங் செய்திகள்

24 Years of Kushi : வெள்ளி விழா ஆண்டை நெருங்கும் எஸ்.ஜே.சூர்யா, விஜய், ஜோதிகாவின் மாஸ்டர் பீஸ் ‘குஷி’

KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

‘‘பள்ளி பருவத்திலிருந்தே என்னுடைய இசைப்பயணம் தொடங்கிவிட்டது. என் அப்பா ஒரு இசைக்கலைஞர். பல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக இருந்தவர். வித்யாசாகர் சாரிடம் டிவோஷனல் ஆல்பம் ஒன்றுக்கு பணியாற்றிய போது, ‘என் மகள்கள் நன்றாக பாடுவார்கள்’ என்று என் அப்பா கூறியதும், எங்களை அழைத்து வர கூறினார். 

நாங்கள் வித்யாசாகர் சாரிடம் பாடிக்காட்டினோம். அவருக்கு பிடித்து போய், பூப்பறிக்க வருகிறோம் படத்தில் ‘எட்டில் அழகு, 18 ல் அழகு’ என்கிற பாடலில், ஹம்மிங்ஸ் எல்லாம் வரும், அது எல்லாமே நான் தான் பாடினேன். அப்படி தான், நான் பாடலுக்குள் வந்தேன். எனக்கே தெரியாமல், அது தொழிலாக மாறியது. அதுவரை சினிமாவில் பாட வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. இருந்தாலும் கிளாசிக் கற்றிருந்ததால், அது பின்னாளில் உதவியது. 

மணிசர்மா சாரிடம் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது, தமனும் அங்கு தான் பணியாற்றினார். அவரை திருமணம் செய்வதாக எந்த ஐடியாவும் எனக்கு இருந்ததில்லை. அவருடைய பெரியம்மா பாடகி வசந்தா தான், என் அப்பாவுக்கு போன் செய்து, ‘என் தங்கை மகனுக்கு உங்க பொண்ணை திருமணம் செய்து வைக்கலாம்’ என்று கூறி, நிச்சயித்தார்கள். மற்றபடி எங்கள் திருமணம் காதல் திருமணம் இல்லை.

அதுக்கு அப்புறம் தெலுங்கில் கிக் படம் வந்த பின், அவர் பயங்கர பிஸியாகிவிட்டார். அவர் பயங்கர ஹார்ட் ஒர்க் பண்ணுவார். வேலை பண்ணும் போது, அவ்வளவு  கடுமையா உழைப்பார். குழந்தை தனம் அவரிடம் மாறவே இல்லை.

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். தமனை திருமணம் செய்த பிறகு, அவருக்கு கிரிக்கெட் மீது இவ்வளவு வெறி இருக்கும் என்பது எனக்கே தெரியாது. தமனுக்கு இசையும், கிரிக்கெட்டும் ஒன்று தான். இரண்டு மீதும் அவருக்கு பயங்கர விருப்பம். 

கிரிக்கெட் விளையாட புறப்பட்டு விட்டால், அவருக்கு வேறு எதுவுமே ஓடாது. என் பையனுக்கும் கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். நேரம் இருக்கும் போது, அவரும் பையனுடன் நேரத்தை செலவிடுவார். அவர் பிஸியாக இருப்பதால், குழந்தையை பார்த்துக் கொள்வதை நான் பார்த்துக் கொள்கிறேன். 

நானும் ஃபில்டில் இருக்கிறேன், இருந்தாலும் அவர் பிஸியாக இருப்பதால் நான் ஒத்துழைக்கிறேன். வாய்ப்புகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. இத்தனை வருசத்திற்கு பின், விஜய் சார் படத்திற்கு இசையமைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதையெல்லாம் நினைத்து தான், நான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். 

அள்ளித்தந்த வானம் படத்தில், ‘கண்ணாலே மெய்யா மெய்யா’ பாடல் தான், நான் பாடி முதலில் ரிலீஸ் ஆன பாடல். அது நல்ல ஹிட் ஆனது. அந்த சமயத்தில் டி.ராஜேந்தர் சார் படத்தில் அழைப்பு வந்தது. சிம்பு சார் அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் பாடினேன். வித்யாசாகர் சார் இசையில் தவசி, அலை படத்தில் பாடினேன். அலை படத்தில், ‘என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையில்’ பாடல், நான் பாடியது தான்,’’

என்று அந்த பேட்டியில் ஸ்ரீவர்தினி கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி