தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga : பஞ்சாயத்தை கூட்டிய வெற்றி.. சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி

Meenakshi Ponnunga : பஞ்சாயத்தை கூட்டிய வெற்றி.. சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி

Divya Sekar HT Tamil

Mar 13, 2023, 11:55 AM IST

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்ப்போம்.
மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்ப்போம்.

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்ப்போம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

ட்ரெண்டிங் செய்திகள்

27 Years Of Pistha: மறக்க முடியுமா?கார்த்திக் - நக்மாவின் கலக்கல் நடிப்பில் உருவான 'பிஸ்தா' ரிலீஸான நாள் இன்று!

27 years Of Love Today: இளைஞருக்கு வரும் விடாப்பிடியான ஒரு தலைக்காதல்.. இறுதியில் என்ன ஆகிறது என்பதே லவ் டுடே!

HBD Sai Pallavi : மலர்.. சிம்பிள் என்றாலே இவர் தான்.. இளைஞர்களின் கனவு கன்னி.. நடிகை சாய் பல்லவி பிறந்த நாள் இன்று!

நான் தான் வில்லன்.. நான் தான் ஹீரோ.. இரட்டை வேடங்களில் எம்ஜிஆர்.. அனல் பறந்த நினைத்ததை முடிப்பவன்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கும் விஷயம் தெரிந்த சக்தி வெற்றியிடம் சொல்ல சக்தியும் வெற்றியும் கார்த்திக்கிடம் சென்று விவரம் கேட்க கார்த்திக் எனக்கு பெண் பார்க்க நானே இல்லாமல் என் அம்மாவும் அப்பாவும் சென்றிருக்கிறார்கள் என்று விஷயத்தை சொல்கிறான்.

அடுத்து கோகிலாவும் கனக லிங்கமும் ஒரு வீட்டில் பெண் பார்த்து தட்டு மாற்றிக் கொள்ளும் சமயத்தில் வெற்றி அங்கே வந்து அந்த நிகழ்வை நிறுத்தி விடுகிறான். கோகிலாவின் மீது பஞ்சாயத்தில் புகார் கொடுத்திருப்பதாக சக்தியும் வெற்றியும் சொல்ல கோகிலா அதிர்ச்சி அடைகிறாள்.

அடுத்து சத்தி ரங்கநாயகியை பஞ்சாயத்திற்கு அழைக்க முதலில் வர மறுத்து பின் பஞ்சாயத்து தலைவி என்ற முறையில் பஞ்சாயத்திற்கு வர ஒப்புக் கொள்கிறாள்.

பஞ்சாயத்தில் கார்த்திக்கிற்க்கும் யமுனாவிற்க்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து விட்டது ஆனால் கார்த்திக்கின் அம்மா வேறு இடத்தில் பெண் பார்க்கிறார்கள் என்று சக்தி கூற யமுனா, கார்த்திக் கல்யாணம் மணமேடை வரை சென்று நின்று விட்டது என்று கோகிலா சொல்கிறாள்.

அதோடு யமுனாவை எங்களுக்கு பிடிக்கவில்லை அதனால் இந்தக் கல்யாணம் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்று பஞ்சாயத்தில் சொல்ல சக்தியும் யமுனாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.