தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dora Buji: சின்ன சண்டை.. போதை பழக்கமா.. கண்ணீருடன் பேட்டி அளித்த டோரா

Dora Buji: சின்ன சண்டை.. போதை பழக்கமா.. கண்ணீருடன் பேட்டி அளித்த டோரா

Aarthi V HT Tamil

Dec 27, 2023, 12:01 PM IST

ஹரி மற்றும் தேசராணி இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டு உள்ளனர்.
ஹரி மற்றும் தேசராணி இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டு உள்ளனர்.

ஹரி மற்றும் தேசராணி இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டு உள்ளனர்.

இப்போது உள்ள காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில் மூலம் ஏராளமானோர் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி ஒரு ஜோடி தான் டோரா புஜ்ஜி. டோரா புஜ்ஜி என்ற சேனல் தொடங்கி ரீல்ஸ் செய்து பிரபலமானார்கள் ஹரி மற்றும் தேசராணி. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இவர்கள் இருந்தார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

தேசராணி பெண், ஆனால் ஹரி பெண்ணாக இருந்து ஆணாக மாறினார். இதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் காதலை மட்டும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், ஹரி மற்றும் தேசராணி இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டு உள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று, தேசராணி தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.

அதில், ”நான் ஹரியை நம்பினேன். ஆனால் என்னை ஏமாற்ற தொடங்கி விட்டான். பண விஷயத்தில். சேனலில் ப்ரோமோஷன் விஷயம் எல்லாம் அவனுக்கு தான் தெரியும். எனக்கு எவ்வளவு பணம் வந்தது? எவ்வளவு செலவானது? என எதுவுமே தெரியாது. நிறைய பணம் வந்தது, வங்கி கணக்கை பார்த்த பிறகு தான் தெரிந்தது.

ஆனால் என்னிடம் அதைப் பற்றி சொல்லவே இல்லை. இருவரும் சேர்ந்து ஒரு கார் வாங்கினோம். அந்த காருக்கு நான் மட்டும் 5 லட்சம் ரூபாய் என்னுடைய பங்காக கொடுத்தேன். ஆனால் அதை செலுத்தாமல் வெறும் 3 லட்ச ரூபாய் மட்டும் செலுத்திவிட்டு இரண்டு லட்ச ரூபாயை தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டான்.

அந்த காருக்கு EMI செலுத்த சொல்லி என்னை தான் தொந்தரவு செய்கிறார்கள். அவனுக்கு போதை பழக்கம் இருந்தது எனக்கு தெரியவந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனுக்கு போதை ஊசி போட்டு அளவு கொண்டு சென்றுவிட்டது. அவன் வீட்டில் நான் சொல்லிய போது, என்னை செருப்பால் அடித்து அனுப்பினார்கள்.

இந்த கொடுமை எல்லாம் தாங்கி கொண்டு இருந்தேன். அதனால் அவனை விட்டு பிரிந்து விடலாம் என முடிவு செய்து பிரிந்து விட்டேன். இவ்வளவு வேதனைகளை நான் அனுபவித்து இருக்கிறேன்.

எனக்கு ஆதரவு கூறுவதற்கு யாரும் கிடையாது. மனம் பாரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளை கடப்பதற்கு வேதனையாக இருக்கிறது. என்னுடைய மனதில் இருந்து அனைத்து குறைகளையும் போட்டு உடைத்து விட்டேன் “ என்றார்.

இது தொடர்பாக டோரா என்ற ஹரி Jaaimanivel என்ற நபரின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அதில், ” என்னுடைய புஜ்ஜி நல்ல பொண்ணு. அவளுடன் இருக்கும் சிலரின் பேச்சை கேட்டு இப்படி நடந்து கொள்கிறாள். எல்லாரும் சொல்லி கொடுத்து மாற்றிவிட்டார்கள். ஐந்து வருடமாக அவளுடன் நான் இருக்கிறேன். சின்ன சின்ன சண்டை வர தான் செய்யும். அதை பெரிதாகி என் காதலியை என்னிடம் இருக்கும் பிரிக்க பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அதற்காக நான் போதை பழக்கத்திற்கு அடிமே என்று எல்லாம் சொல்லி இருக்க வேண்டாம்.

நான் பீர், சிகரெட் அடிப்பேன். அதையும் ரீல்ஸ் செய்ய மட்டுமே செய்வேன். ஏன் அவள் இப்படி செய்தாள் என தெரியவில்லை. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு “ என்றார்.

நன்றி: Jaaimanivel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி