தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Additional Case Registered In Actress Parvati Nair's Complaint

Parvati Nair: நடிகை பார்வதி நாயர் விவகாரம்: மேலும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

Dec 06, 2022, 10:40 AM IST

சுபாஷ் புகார் அளித்திருந்த நிலையில், பார்வதி நாயர் இரண்டாவதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது மேலும் கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுபாஷ் புகார் அளித்திருந்த நிலையில், பார்வதி நாயர் இரண்டாவதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது மேலும் கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுபாஷ் புகார் அளித்திருந்த நிலையில், பார்வதி நாயர் இரண்டாவதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது மேலும் கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகை பார்வதி நாயரின் முதல் புகருக்கு ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது புகார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Nepolean: நடிகர் சங்க கட்டிடம்.. நிதியுதவி கொடுத்த நெப்போலியன்.. எவ்வளவு தெரியுமா?

Samantha: ரூ.72 லட்சம் ஜாகுவார் முதல் ரூ 2.26 கோடி லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வரை.. சமந்தாவின் ஆடம்பர கார் பட்டியல்

Madan Patti Rangaraj: வெங்கடேஷ் பட்டிற்கு மாற்று இவனா?…சின்னப் பையனப் போய்.. - வன்ம வசைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில்

Blue Sattai Maran: வின்னர் கில்லி தான்.. இயக்குநர் ஹரியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் பார்வதி நாயர் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பார்வதி நாயர் - கோப்பு படம்

இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் 20ஆம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனது புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் தருவதாகவும் கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் நுங்கம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாஷ் புகார் அளித்திருந்த நிலையில், பார்வதி நாயர் இரண்டாவதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது மேலும் கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.