தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Smriti Irani Vs Rahul Gandhi: ’அமேதிக்கு பதில் ரேபரேலி! ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக்கொண்டார்’ ஸ்மிருதி இராணி காட்டம்!

Smriti Irani Vs Rahul Gandhi: ’அமேதிக்கு பதில் ரேபரேலி! ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக்கொண்டார்’ ஸ்மிருதி இராணி காட்டம்!

Kathiravan V HT Tamil

May 03, 2024, 04:45 PM IST

“ரேபரேலி தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார்” (PTI)
“ரேபரேலி தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார்”

“ரேபரேலி தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார்”

நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடாமல் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக் கொண்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்து உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

Mamata Banerjee Vs Modi: ’பாஜக 200ஐ தாண்டாது! இந்தியா கூட்டணி 300ஐ தாண்டும்!’ அடித்து சொல்லும் மம்தா! இதுதான் காரணமாம்!

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, செல்வாக்கு மிக்க காந்தி குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர் இல்லாமல் அமேதியில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில் களமிறங்கு வேட்பாளராக கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் கட்சி இன்று காலை அறிவித்தது.

ரேபரேலி தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார். 

இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் தனது வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்து உள்ளார். 

அமேதி மக்களவைத் தொகுதியில் அசைக்க முடியாத காங்கிரஸின் கோட்டையை தனித்து உடைத்த ஸ்மிருதி இரானி, அமேதியில் தோல்வியை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

"காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடாதது, தேர்தலுக்கு முன்பே அமேதியில் தோல்வியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது" என்று அவர் கூறினார்.

அமேதி மற்றும் காந்தி குடும்பம்

1967ஆம் ஆண்டு முதல் அமேதி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. ராகுல் காந்தி 2004 முதல் 2019 வரை எம்.பி.யாக இருந்தார். அவருக்கு முன் சோனியா காந்தி அத்தொகுதியில் நின்று வெற்றி பெற்று இருந்தார். 

மேலும் இந்திரா காந்தியின் மற்றொரு மகன் ஆன சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் அமேதி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்து உள்ளனர். 

கடந்த 1998-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளரான சதீஷ் சர்மா தேர்தலில் போட்டியிட்டபோது, காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் இந்தத் தொகுதியில் கடைசியாக போட்டியிட்டார். ஆனால், பாஜகவின் சஞ்சய் சிங்கிடம் அவர் தோல்வி அடைந்தார்.

அடுத்த ஆண்டு, சோனியா காந்தி அமேதியில் போட்டியிட்டு, மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவுக்கு அவமானகரமான அடியைக் கொடுத்தார்.

2004 ஆம் ஆண்டில், சோனியா காந்தி ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு மாறினார். காங்கிரஸ் கோட்டையான அமேதி தொகுதியை அவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைந்த்து இருந்தார். 

அமேதியின் அரசியல் வரலாறு

அமேதியின் முதல் எம்பி காங்கிரஸின் வித்யா தார் பாஜ்பாய் ஆவார். 1977ல் ஜனதா கட்சியின் ரவீந்திர பிரதாப் சிங் எம்.பி.யானார். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சஞ்சய் காந்தி அவரை தோற்கடித்தார்.

சஞ்சய் காந்தி விமான விபத்தில் பரிதாபமாக இறந்த பிறகு, ராஜீவ் காந்தி மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1991 இல் அவர் இறக்கும் வரை அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா 1991 மற்றும் 1996 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். 1998ஆம் ஆண்டு, பாஜகவின் சஞ்சய சிங் சிறிது காலம் அமேதியின் எம்பியாக இருந்தார்.

2014ஆம் ஆண்டில் ராகுல் காந்தி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானியை தோற்கடித்தார்.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டில், பாஜகவின் 'மாபெரும் கொலையாளி' ஸ்மிருதி இரானி 55000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்ததன் மூலம் பிரபலமான வெற்றியைப் பெற்றார்.

ரேபரேலியில், 2019 தேர்தலில் சோனியா காந்தியிடம் தோல்வியடைந்த பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை ராகுல் காந்தி எதிர்கொள்கிறார். அமேதி மற்றும் ரேபரேலியில் மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அடுத்த செய்தி