தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tiruchendur Temple: சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்!

Tiruchendur Temple: சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்!

Divya Sekar HT Tamil

Mar 27, 2023, 07:01 AM IST

சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 1500லிருந்து 5000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று(மார்ச் 27) முதல் கோயில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.
சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 1500லிருந்து 5000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று(மார்ச் 27) முதல் கோயில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.

சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 1500லிருந்து 5000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று(மார்ச் 27) முதல் கோயில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.

அறுபடை வீடுகளில் மிகவும் சிறப்பு மிக்க கோயிலாகத் திகழ்ந்து வருவதைத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இது இரண்டாம் படை வீடாகும். உலகம் முடிவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வார்கள். தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து இந்த கோயிலுக்கு வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

குரு குதூகலிக்க போகிறார்.. கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வாழையடி வாழையாய் வாழப் போகும் ராசிகள்..!

May 04, 2024 12:44 PM

பண முட்டையை அவிழ்த்து விட்டார் சுக்கிரன்.. சுத்தி சுத்தி அடி வாங்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது உறுதி

May 04, 2024 11:23 AM

குபேரனுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்.. எப்போதும் உங்களை விடாமல் பணத்தில் குளிக்க வைப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள்

May 04, 2024 10:03 AM

Love Horoscope : உங்கள் காதலியை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.. கவனமாக இருங்கள்!

May 04, 2024 09:55 AM

Venus Transit : ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு செல்வம் பெருகும்.. தொட்டது துலங்கும்!

May 04, 2024 09:34 AM

செவ்வாய் மீனத்தில் முரட்டு அடி.. சிக்கி கொண்ட ராசிகள்.. புரட்டி எடுக்க போவது உறுதி

May 04, 2024 06:45 AM

சமுத்திரத்தின் அருகே இந்த கோயில் அமைந்திருப்பதால் இது மேலும் சிறப்பாகும். என் நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர் கார்த்திக் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் சண்முகார்ச்சனையின் கட்டணமாக ரூபாய் 1500 வசூலிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்தின் காரணமாகக் கோயில் மூலம் சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 5000 ஆக உயர்த்தி சட்ட விதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஆட்சேபனை ஏதும் வராத காரணத்தினால் கோயில் அறங்காவலர் குழு சுற்றுத் தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த ஆணையின்படி கோயில் மூலம் சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 1500லிருந்து 5000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று(மார்ச் 27) முதல் கோயில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.

எனவே பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூபாய் 5000 கட்டணத்தைச் செலுத்தி சண்முகார்ச்சனை நேர்த்திக் கடனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்