தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video:பற்றி எரிந்த தீ… சுவர் மீது ஏறி மூவர்ண கொடியை பத்திரமாக மீட்ட நபர்

Viral video:பற்றி எரிந்த தீ… சுவர் மீது ஏறி மூவர்ண கொடியை பத்திரமாக மீட்ட நபர்

Jan 19, 2023 02:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 19, 2023 02:35 PM IST

ஹரியானா மாநிலத்தில் கட்டிடம் ஒன்றில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்க சென்றபோது, அங்கிருந்த தேசிய கொடி மீது தீ பற்ற விடாமல், அதை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பானிப்பட் நகரிலுள்ள மில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராட தீயை அணைத்தனர். அப்போது அங்கிருந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் நிறுவப்பட்டிருந்த இந்திய நாட்டின் தேசிய கொடியை பார்த்து சுனில் மேக்லா என்ற தீயணைப்பு வீரர் ஒருவர், அதில் தீ பற்றிக்கொள்ளாமல் தடுக்கும் விதமாக சுவர் ஏறி தேசிய கொடியை பத்திரமாக கொடிகம்பத்திலிருந்து நீக்கி எடுத்து வந்தார். பற்றி எரியும் தீ காரணமாக ஏற்பட்டிருக்கும் கடுமையான புகைமூட்டத்துக்கு மத்தியில் பத்திரமாக அவர் கொடியை மீட்டு வந்துள்ளார். இந்த விடியோ வைரலாகியுள்ள நிலையில் தனது உயிரை பொருப்படுத்தாமல் இந்த செயலில் ஈடுபட்ட தீயணைப்பு வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

More