தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Youth Died: தாய்க்கும் பாட்டிக்கும் தீ வைத்த இளைஞர் உயிரிழப்பு!

Youth Died: தாய்க்கும் பாட்டிக்கும் தீ வைத்த இளைஞர் உயிரிழப்பு!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 26, 2023 11:59 AM IST

தாய் மற்றும் பாட்டுக்கு தீ வைத்து எரித்துவிட்டு இளைஞர்கள் ஒருவர் தனக்கும் தீ வைத்துக் கொண்டார்.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில் அசோக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் அசோக் குமாரின் தாயார் யசோதா மற்றும் பாட்டி வள்ளியம்மாள் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அசோக் குமார் திடீரென தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் பாட்டியின் மீது வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி தீ வைத்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

அதே சமயம் தனக்குத்தானே அசோக்குமார் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். தீயிலிருந்து இருந்து கொண்டிருந்த மூன்று பேர் மீதும் மணல் மற்றும் ஈரத் துணியை வைத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர்.

பலத்த காயமடைந்த மூன்று பெரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காகச் சென்னைக்கு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம் யசோதா மற்றும் வள்ளியம்மாள் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் கூறப்படுகிறது. தற்போது இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்