தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dharapuram: பெண் இன்ஸ்பெக்டர் திடீர் மாயம்? - ஆடியோவால் திருப்பூரில் பரபரப்பு

Dharapuram: பெண் இன்ஸ்பெக்டர் திடீர் மாயம்? - ஆடியோவால் திருப்பூரில் பரபரப்பு

Karthikeyan S HT Tamil
Mar 01, 2023 11:49 AM IST

தாராபுரம் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாராபுரம் பெண் இன்ஸ்பெக்டர்
தாராபுரம் பெண் இன்ஸ்பெக்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

சமூகவலைத்தளங்களில் பரவும் இந்த ஆடியோவில், இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு 8:45 மணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒரு மாருதி காரில் வந்ததார். அதன் பிறகு அந்த கார் ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

திண்டுக்கல் பகுதியில் சென்ற போது கார் மாயமானதாகவும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தோழியான மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதனா சக போலீஸாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அவரது புகைப்படத்தை அனுப்பி கண்டுபிடிக்க வேண்டும் என பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் செல்லம் கிடைத்துவிட்டார் என்று மற்றொரு பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு, மயமானதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் செல்லம் குடும்ப பிரச்னை காரணமாக விடுப்பு எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மேல் தகவல் எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்