தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul Suicide: காதல் மனைவி விபத்தில் உயிரிழப்பு - கணவர் தற்கொலை!

Dindigul suicide: காதல் மனைவி விபத்தில் உயிரிழப்பு - கணவர் தற்கொலை!

Divya Sekar HT Tamil
Oct 05, 2022 10:44 AM IST

வேடசந்தூர் அருகில் மனைவி விபத்தில் உயிரிழந்ததால் கணவனும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். காதல் மனைவியை பிரிந்த சோகத்தால் நந்தகுமார் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நந்தகுமார் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்