தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Very Heavy Rain Warning: கடலோரா மாவட்டங்கள்தான் டார்கெட்! 7 மாவட்டங்களில் மிக கனழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

Very Heavy Rain Warning: கடலோரா மாவட்டங்கள்தான் டார்கெட்! 7 மாவட்டங்களில் மிக கனழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

Kathiravan V HT Tamil
Nov 13, 2023 12:34 PM IST

”தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது”

தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்
தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் காஞ்சிபுரம், செங்கல்பட்டும் விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர்ம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும்,

12 முதல் 20 செமீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்