தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mp Siva Attack:அவமதிக்கப்பட்டநேரு? சூறையாடப்பட்ட சிவாவின் வீடு; நடந்தது என்ன?

MP Siva Attack:அவமதிக்கப்பட்டநேரு? சூறையாடப்பட்ட சிவாவின் வீடு; நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 15, 2023 11:34 AM IST

திருச்சி எம்.பி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்தான விபரங்கள்வெளியாகியுள்ளன

உச்சக்கட்ட மோதல்!
உச்சக்கட்ட மோதல்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டின் நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு இன்று (15.03.2023) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட எஸ் பி ஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தினை குத்து விளக்கேற்றி திறந்து வைக்க அங்கு வருகை தந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட  எம்.பி சிவாவின் வீடு!
தாக்குதல் நடத்தப்பட்ட எம்.பி சிவாவின் வீடு!

அப்பொழுது திருச்சி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் எம்பி சிவாவின் பெயரை பெயர் பலகையில் போடவில்லை என கூறி அமைச்சர் நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக உருபெற்றது.

உடைக்கப்பட்ட கார் கண்ணாடி!
உடைக்கப்பட்ட கார் கண்ணாடி!

இந்த நிலையில் நேருவின் ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்; இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கருப்பு கொடி காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்கள் என மூன்றுக்கும் மேற்பட்ட வரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மேலும் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் அசாம்பிவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்