School Holiday : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கு தெரியுமா?
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக சனிகிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறைகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளார்.
அதில், “நாளை மாசி மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை” என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
அதேபோல நாளை உலகம் முழுவதும் மகா சிவராத்திரி கடைப்பிடிக்கப்பட இருப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் 'மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை பிப்ரவரி 18ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாவட்ட கருவூலங்கள் குறைவான பணியாளர்களை கொண்டு வழக்கம் போல் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 25ஆம் தேதி பணி நாளாக செயல்படும்” என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்