தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மக்களே.. அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்குமாம்!

மக்களே.. அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்குமாம்!

Divya Sekar HT Tamil
Apr 13, 2024 08:55 AM IST

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வெயில்
வெயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14.04.2024 மற்றும் 15.04.2024: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

16.04.2023 முதல் 18.04.2024 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37'-40' செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33'-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

14.04.2024 5 16.04.2024 அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் 2*செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38-41° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34'-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

 13.04.2024: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

கோடையை இதமாக்கும் டாப் 10 டிப்ஸ் இதோ

வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் பருகி வர உடல் உஷ்ணம் தணியும்

தண்ணீரில் வெட்டி வேரை நறுக்கி போட்டு ஊறியதும் குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் இருக்காது

வெங்காயத்தை நறுக்கி, பசு நெய்யில் வதக்கி, காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சூட்டால் ஏற்படும் மூல நோய் குணமாகும்

வியர்வை நாற்றத்தால் அவதிப்படுவோர் தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து குளிக்கலாம்

மோரில் பச்சை மிளகாய்க்கு மாற்றாக சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால், சுவை தூக்கலாகும், உடலுக்கும் நல்லது

கோடை காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க கறிவேப்பிலையை அரைத்து, மோரில் கலக்கி குடிக்கலாம்

கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க வெள்ளரிக்காய் சாற்றுடன், பீட்ரூட் சாறு சேர்த்து பருகலாம்

பானை தண்ணீரில் கைப்பிடி அளவு நன்னாரி வேரை போட்டு வைத்தால் சுவையுடன் குளிர்ச்சி தரும்

கோடை காலத்தில் நன்னாரி சர்பத் குடிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்