கிருத்திகாவை ஒப்படைக்கக் கோரி மனு-வழக்கு விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Highcourt Madurai Branch: இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தென்காசி மாவட்டத்தில் பெற்றோர்கள் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்டு தரக்கோரி காதல் கணவன் வினித் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னதாக, கிருத்திகாவை அவரது உறவினர்களிடம் அனுப்பினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என காவல் துறை தெரிவித்தது.
வழக்கு தொடர்பாக தென்காசி காவல்துறையினர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், வழக்கு விசாரணை 16ஆம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நான் தென்காசி மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.மேலும் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.
இந்நிலையில் கிருத்திகாவின் பெற்றோர்கள் அவரை கடத்திச் சென்று விட்டனர். எனவே கிருத்திகாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் கிருத்திகாவை தென்காசியில் காப்பக்கத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அவரிடம் வாக்குமூலம் பெற்று தென்காசி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
கிருத்திகாவிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கிருத்திகாவின் உறவினர்கள் தரப்பில் கிருத்திகாவை தங்களது பாதுகாப்பில் அனுப்ப உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தனர்.
காவல்துறை தரப்பில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் காரணத்தினாலும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் கிருத்திகாவை அவரது உறவினரிடம் அனுப்பினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்தனர்
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
டாபிக்ஸ்