Governor Tamilisai: கருப்பு என்றால் நெருப்பாய் மாறுவேன் - ஆளுநர் தமிழிசை
என்னைக் கருப்பு என்று சொன்னால் நெருப்பாய் மாறி உயர்ந்து கொண்டே இருப்பேன் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பேற்று பதவி வகுத்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதற்கு முன்பு இவர் தமிழ்நாடு பாஜக கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார்.
மருத்துவரான இவர் பாஜக கட்சியின் தலைவராக இருக்கும் பொழுது இவரைப் பலரும் உருவக் கேலி செய்து வந்தனர். கட்டையாக இருப்பதும், கர்லிங் ஹேர் இருப்பதாலும் பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கேலி செய்து வந்தனர்.
எப்போதும் அதனைத் தமிழிசை சௌந்தரராஜன் பொருட்படுத்தியது கிடையாது. தற்போது பெரிய பொறுப்பைச் சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.
அவ்விழாவில் மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அதேசமயம் அவர்களை உத்வேகப்படுத்தும் வகையில் தனது சொந்த வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்," என்னைக் கருப்பாக இருக்கிறீர்கள் என்றும், பரட்டை என்றும், கட்டை என்றும் பலர் கேலி செய்துள்ளனர். என்னைக் கருப்பு என்று சொன்னால் நான் நெருப்பால் மாறி உயர்ந்து கொண்டே இருப்பேன் என்னைப் பரட்டை என்று சொன்னால் நான் பறந்து கொண்டே இருப்பேன்" எனத் தெரிவித்தார்.
டாபிக்ஸ்