Chengalpattu : ‘காதலி பேசவில்லை’ - ரசாயனம் ஊற்றி எரித்துக்கொன்ற வாலிபர் - ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்
Chengalpattu Judgement : செங்கல்பட்டில் கள்ளக்காதலி பேசாமல் போனதால் அவர் மீது மருத்துவ ரசாயனம் ஊற்றி, தீ வைத்து கொலை செய்த வழக்கில் லேப் டெக்னிஷியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி ஜமுனா. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (45). இவர் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ராஜா பணியாற்றி வந்த அதே மருத்துவமனையில் ஆனந்த் தனது மனைவி ஜமுனாவை லேப் டெக்னிசியன் பணிக்கு வேலைக்கு சேர்த்துள்ளார்.
ஒரே இடத்தில் பணியாற்றி வந்த ராஜாவுக்கும், ஜமுனாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ஆனந்த், மனைவி ஜமுனாவை கண்டித்தார். அதன் பின்னர் ராஜாவுடன் பேசுவதை ஜமுனா நிறுத்திக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா, மருத்துவத்துக்கு பயன்படும் ரசாயனத்தை ஜமுனா மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்தார். இதில் படுகாயம் அடைந்த ஜமுனா, சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 5 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி ஜமுனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் 2018ம் ஆண்டு நடந்தது. இதுதொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் கொலை, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, குற்றவாளியான ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்