Annamalai: ‘அசிங்கப்பட வைக்காதீங்க அண்ணாமலை!’ விளாசும் எஸ்.வி.சேகர்!
”மத்தியக் குழு சம்பிரதாயத்துக்கு தமிழக அரசை பாரட்டியது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என அண்ணாமலை கூறி இருந்தார்”
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதி வரை பெய்த தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய குழு அதிகாரிகள் ஆகியோர் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ள பாதிப்பை எதிர்கொண்டது குறித்து தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு தெரிவித்து இருப்பது சம்பிரதாயமானது என்றும் அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு அதிகாரிகள்,மாநில அரசு அதிகாரிகளை ஒரு போதும் குற்றம்சாட்டமாட்டார்கள். அதே போல மாநில முதல்வர்களையும் குறைகூற மாட்டார்கள். புயல் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த மத்தியக் குழு சம்பிரதாயத்துக்கு தமிழக அரசை பாரட்டியது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் ”மத்திய தலைமை சந்தோஷப்பட்டு தமிழக தலைவரா அண்ணாமலையை போட்டது கூட இங்க எவ்வளவோ பேருக்கு உடன்பாடு இல்லை. நாங்க பொறுத்துக்கலையா. அதிகப்பிரசங்கித்தனமா பேசி நம்ம மேலிடத்தையே அசிங்க்கப்பட வைக்கக்கூடாது. புரியுதா Ex. IPS.” என ட்வீட் செய்துள்ளார்.
டாபிக்ஸ்