தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dog Bite : குழந்தை தலையை கடித்து குதறிய தெரு நாய்கள் - கொலையா? போலீசார் விசாரணை!

Dog Bite : குழந்தை தலையை கடித்து குதறிய தெரு நாய்கள் - கொலையா? போலீசார் விசாரணை!

Divya Sekar HT Tamil
Apr 15, 2023 11:43 AM IST

புதுச்சேரியில் குழந்தையின் தலையை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை தலையை கடித்து குதறிய தெரு நாய்கள்
குழந்தை தலையை கடித்து குதறிய தெரு நாய்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஏராளமான தெரு நாய்கள் உருண்டையான பொருள் ஒன்றை கடித்து குதறியது. அவர்கள் அதனை ஏதோ ஒரு பொருள் என நினைத்து கடந்து சென்றனர்.

இதனை அப்பகுதியில் மருந்து கடை வைத்துள்ள விக்கி என்பவர் பார்த்தார். நாய்கள் கடித்து கொண்டிருந்தது குழந்தையின் தலை போல இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்தனர். அப்போது தான் நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்லும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் தலையை மீட்டனர். மேலும் அந்த பகுதியில் குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் இருக்கிறதா? என போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

தலை அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. குழந்தை கொலை செய்யப்பட்டதா? இல்லை சுடுகாட்டில் இருந்து நாய்கள் தூக்கி வந்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்